காரில் துப்பாக்கிகளை கொண்டு சென்ற விவகாரம்.. டி.ஆர்.எஃப் அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது!

ஜம்மு-காஷ்மீரில் டி.ஆர்.எஃப் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகளை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
காஷ்மீரில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் நடமாடி வருவதாக அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் மற்றும் சிறப்பு பிரிவினர் சோதனை சாவடி அமைத்து சோதனை நடத்தினார்கள். அப்பொழுது ஸ்ரீநகர் நோக்கி சென்ற ஒரு காரை பிடித்து சோதனை செய்த போலீசார், அதில் இருக்கும் பொருட்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அந்த காரில் 16 துப்பாக்கிகள் இருந்ததை கண்டு அதிர்ந்த போலீசார், அதில் பயணம் செய்த இருவரிடம் விசாரித்தனர், அப்பொழுது அவர்கள் இருவரும் டி.ஆர்.எஃப் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…
March 10, 2025
நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
March 10, 2025