உ. பி-யில் 20 வயது பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர்.! போலீசில் புகார் அளித்த தாயார்.!

Default Image

உ. பி-யில் 20 வயது பெண்ணை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் உள்ள ஒரு காட்டில் தனது தாயுடன் 20 வயது பெண் விறகு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது பைக்கில் அந்த வழியாக வந்த இரண்டு ஆண்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அருகிலுள்ள கரும்பு வயலுக்கு இழுத்து சென்று சல்மான் என்ற நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனையடுத்து வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி, பைக்கில் வந்து பாலியல் பலாத்காரம் செய்த சல்மான் மற்றும் அவரது கூட்டாளியான மயங்க் ஆகியோர் மீது ஐபிசி தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் இரண்டு பேரையும் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

appavu - pm modi
VCK Leader Thirumavalavan - TN BJP Protest against TASMAC
TN Assembly - Speaker Appavu
TN CM MK Stalin - BJP State president Annamalai
gold price
Annamalai - BJP-Tasmac
TN Assembly Speaker Appavu