அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது!

Published by
கெளதம்

இஸ்லாமியர்கள் பெயரில் போலியாக இமெயில் கணக்கு தொடங்கி, அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் விரைவில் திறக்கப்பட உள்ள ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் 2 பேரை உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.

அயோத்தி ராமர் கோவிலில் வெடிகுண்டு வீசப்படும் என உபி டிஜிபி தலைமையகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 27 அன்று எக்ஸ் தளத்தில் மிரட்டல் இமெயிலில் வந்ததை அடுத்து இந்த கைது நடந்துள்ளது. தற்பொழுது இவர்களின் பின்னணி குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமர் கோயில் வெடிவைத்து தகர்க்கப்படும், முதல்வர் யோகி ஆதித்யநாத் கொல்லப்படுவார் என இஸ்லாமியர்கள் பெயரில் இமெயில் அனுப்பி மிரட்டிய ஓம்பிரகாஷ் மிஸ்ரா மற்றும் தஹார் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

4வது சம்மனுக்கு திட்டம்! பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!

அவர்களிடம் விசாரணை செய்ததில், ‘alamansarikhan608@gmail.com’ மற்றும் ‘zubairkhanisi199@gmail.com’ ஆகிய இமெயில் ஐடிகள் மூலம் மிரட்டல் பதிவுகளை அனுப்ப பயன்படுத்தப்பட்டதும் பின்னர், இந்த மின்னஞ்சல்கள் பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐயின் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் ஜுபைர் கான் என்ற நபரால் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Recent Posts

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…

10 minutes ago

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

39 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

1 hour ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

3 hours ago