ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் நகரில் நேற்று பாதுகாப்புப் படையினர் மற்றும் ஜம்மு காவல்துறை இணைந்து நடத்தியதாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ல்ஷ்கர்இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சஜித் மற்றும் பிலால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு ஏ.கே 47 ரைபிள்ஸ், சேட்டிலைட் போன் ஒன்று ஆகியவை அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்திற்கு பயங்கரவாதிகள் வந்தாக தகவல் வெளியானது. இந்த குழுவில் இரண்டு பாகிஸ்தானியர்கள் மற்றும் உள்ளூர் பயங்கரவாதிகள் உள்ளனர் என்றும், காஷ்மீரில் நடந்து வரும் தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி இது என கூறப்பட்டது.
இதனால், பூஞ்ச் நகரில் பாதுகாப்புப் படையினர் தேடல் நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது, பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சரணடையச் சொன்னார்கள், ஆனால் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…