மேற்கு வங்கத்தில் ஒரு வீட்டில் கச்சா குண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள கமர்ஹாட்டி கோலகாட் எனும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த கச்சா குண்டு வெடித்ததில் அங்கிருந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் சஜித் மற்றும் ராஜா எனும் இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வெடிவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும், கமர்ஹாட்டி புறநகர் நிலையத்தில் உள்ள போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 4 பேரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்ததாகவும் ஒருவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றொருவர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெறுவதாகவும் கூறியுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…