Categories: இந்தியா

ஹமாஸ் தாக்குதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பெண் பாதுகாப்பு அதிகாரிகள் மரணம்!

Published by
கெளதம்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான யுத்தம் 10வது நாளாக இன்றும் நீடித்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இஸ்ரேலியன் தாக்குதலில் காசா நகரில் 2.670 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய யூத மக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த தாக்குதலில் 9,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படியான சூழலில்,  ‘ஆபரேஷன் அஜய்’ எனும் திட்டம் மூலம் மத்திய அரசு இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியர்களை மீட்டு வருகிறது.

அப்படி இருந்தும், இஸ்ரேல் பகுதிக்குள் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு இஸ்ரேலிய பெண் பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்னர். இவர்கள் இருவரும் போரில் பணியில் இருந்தபோது தான் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அந்த தகவளின்படி, 22 வயதான அஷ்டோட் பகுதியின் ஹோம் ஃப்ரண்ட் கமாண்டின் தளபதி லெப்டினன்ட் ஆர் மோசஸ் மற்றும் காவல் துறையின் மத்திய மாவட்டத்தில் எல்லைக் காவல் அதிகாரி இன்ஸ்பெக்டர் கிம் டோக்ராக்கர் ஆகியோர் அக்டோபர் 7 அன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோதலில் இதுவரை 286 ராணுவ வீரர்கள் மற்றும் 51 போலீஸ் அதிகாரிகள் பலியாகியுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்களைத் தேடி வருவதால், பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

போப் மறைவு: பிரதமர் மோடி முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…

2 hours ago

உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!

டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…

2 hours ago

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை! நாகர்கோயில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…

3 hours ago

“HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!

சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது,…

3 hours ago

நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? முதலமைச்சர் – இபிஎஸ் காரசார வாதம்.!

சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…

5 hours ago

பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இடம்பிடித்த வருண்..வருடாந்திர ஊதியம் இவ்வளவா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…

5 hours ago