இராஜஸ்தானை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு 40 விநாடிகளில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு தடுப்பூசி போடுவது ஒன்றே தீர்வு என மக்கள் தற்பொழுது விழிப்புணர்வு அடைந்துள்ள நிலையில், பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் தடுப்பூசி போட கூடிய மக்கள் பல நேரங்களில் தடுப்பூசி போடும் ஊழியர்களின் அலட்சியத்தால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. சிலருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்த அடுத்த நிமிடங்களிலேயே மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜூன் ஜுனு என்னும் மாவட்டத்தில் உள்ள பக்காரா எனும் கிராமத்தில் கடந்த ஜூலை 3ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது அந்த முகாமிற்கு சுரேந்திர குமார் எனும் நபர் தனது மனைவி மாயாவை அழைத்து வந்துள்ளார். அங்கு தடுப்பூசி போட சென்றபொழுது ஊழியர்கள் தொலைபேசியில் பிஸியாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மாயாவுக்கு ஒரு பெண் ஊழியர் தடுப்பூசி முதல் டோஸ் போட்டதும், அடுத்து ஒரு பெண் ஊழியர் மீண்டும் தடுப்பூசி போட வந்துள்ளார்.
ஏற்கனவே அவர் போட்டு விட்டார் என்று மாய கூறினாலும் அவர் தொலைபேசியில் பிஸியாக இருந்ததால் மாயாவின் பேச்சை கண்டு கொள்ளவில்லை. அதன் பின்பு மாயாவின் கணவர் பிரச்சனை செய்ததும் ஒன்றுமில்லை சற்று நேரம் தடுப்பூசி முகாமில் அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு செல்லுங்கள் என கூறியதாக மாயாவின் கணவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுவரை மாயாவுக்கும் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்பட வில்லை எனவும், இனி அவரது மனைவிக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு சுகாதாரத்துறை தான் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…