பீர் விலையில் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் 2 பீர் நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பீர் விலையில் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் யுனைடெட் ப்ரூவரீஸ், கார்ல்ஸ்பெர்க் இந்தியா நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விதிகளை மீறி மதுபான நிறுவனங்கள் இணைந்து பீர் விலையை நிர்ணயிப்பது குறித்து புகார் எழுந்துள்ளது.
இதன் பின்னர் இந்த முறைகேடு குறித்து தாமாக முன் வந்து 2017 ஆம் ஆண்டு விசாரணை நடத்தியது. இது குறித்து இந்திய வணிக போட்டி ஆணையம் கடந்த 4 ஆண்டுகளாக விசாரித்து வந்த நிலையில் யுனைடெட் ப்ரூவரீஸ், கார்ல்ஸ்பெர்க் இந்தியா ஆகிய நிறுவனங்கள் உட்பட 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய 231 பக்க உத்தரவில் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்திற்கு ரூ.752 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கார்ல்ஸ்பெர்க் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.121 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பீர் விலை நிர்ணய முறைகேட்டில் இந்தியாவில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், டெல்லி மற்றும் புதுச்சேரியில் உள்ள நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…