30 ஆண்டுகளாக தர்மம் எடுத்த பெண்ணின் வீட்டில் 2.60 லட்சம் பணம்!

Published by
Rebekal

30 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் உள்ள நௌஷாரா மாவட்டத்தில் தர்மம் எடுத்து வந்த பெண்ணின் குடிசையிலிருந்து 2.60 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நௌஷாரா மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு குடிசையில் வசித்து வரக்கூடிய பெண்மணி ஒருவர் தர்மம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பெண்மணியை அழைத்து செல்வதற்காக நேற்று ரஜோரி மாவட்டத்தில் உள்ள முதியோர் காப்பக ஊழியர்கள் அவரது வீட்டிற்கு அப்பெண்மணியை அழைத்து செல்வதற்காக வந்துள்ளனர். மேலும்,  அவரது குடிசையிலிருந்து குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்த நகராட்சி ஊழியர்களும் வந்துள்ளனர்.

அப்பொழுது அவரது குடிசையில்  பல பைகளில் ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் குவியல் குவியலாக இருந்துள்ளது. இதனை பார்த்த நகராட்சி ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு, பானங்களை எண்ணியுள்ளனர். அதில் 70 முதல் 80 கிலோ நாணயங்கள் இருந்ததாகவும், மேலும் பல ரூபாய் நோட்டுகளும் இருந்துள்ளது.

30 ஆண்டுகளாக அவர் தர்மம் எடுத்த பணத்தை வீட்டில் சேமித்து வைத்து உள்ளார். அவர் அங்கு தனியாக வசித்து வந்ததால், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அவ்வப்போது அவருக்கு பண உதவி செய்து வந்தது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்த பணத்தை கணக்கிட்டதில் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் அவரிடமிருந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த ரூபாய் நோட்டுகள் பல கிழிந்த நிலையிலும் இருந்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

8 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago