மும்பையில் கான்ஸ்டபிளை பீர் பாட்டிலால் தாக்கிய 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கான்ஸ்டபிள் வினோத் மத்ரே (50) புறநகர் கோவாண்டியின் டாடா நகர் பகுதியில் பைக்கில் வேகமாக வந்த மூன்று பேரைக் பார்த்த்துள்ளார். அவர்களில் இருவர் கூர்மையான கத்தி வைத்திருந்தனர். உடனே ரோந்து பணியில் இருந்த வினோத் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது, அவர்கள் கோவண்டி ரயில் நிலையம் அருகே ஷேக் என்பவரை விட்டுவிட்டு மீதம் இருந்த 2 பேர் பைக்கில் தப்பினர்.
இந்நிலையில், ஷேக் வைத்திருந்த கத்தியை வினோத் வாங்க முயற்சி செய்தபோது, ஷேக் தனது கையில் இருந்த பீர் பாட்டிலை வைத்து வினோத் தலையில் அடித்து நொறுக்கினார். அப்போது, அருகில் இருந்த பொதுமக்கள் ஷேக்கைப் பிடித்தனர்.
காயமடைந்த கான்ஸ்டபிள் வினோத்தை மீட்டுமருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்த கான்ஸ்டபிள் வினோத் நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடிய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…