ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயதுடைய குமாரி நாயக் என்ற மூதாட்டிக்கு பாலிடாக்டைலிசம் என்ற அரியவகை நோய் தாக்கியதில், 19 கால் விரல்கள் மற்றும் 12 கை விரல்கள் அவரது உடலில் முளைத்தன. இதனால் அவரை பார்த்து ஊர் மக்கள் பயந்து, அவரை சூனியக்காரி என தவறாக புரிந்து கொண்டு ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். பின்னர் ஊரே தன்னை ஒதுக்கியதால் தனிமையில் மூதாட்டி வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மூதாட்டியை கின்னஸ் சாதனை புத்தகம் தற்போது அங்கீகரித்துள்ளது.
ஏற்கனவே 14 கால் விரல்கள் மற்றும் 14 கை விரல்கள் கொண்ட குஜராத்தின் தேவேந்திர சுதர் என்பவரின் கின்னஸ் சாதனையை இந்த மூதாட்டி குமாரி நாயக் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கின்னஸ் சாதனை புத்தகத்தால் தற்போது வெளி உலகத்திற்கு தெரிய வந்த மூதாட்டி குமாரி நாயக்கை சந்தித்த அரசு அதிகாரிகள், அவருக்கு முறையான சிகிச்சை மற்றும் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். இவ்வளவு நாள் எந்த ஊர் அந்த மூதாட்டியை ஒதுக்கி வைத்ததோ அவர்களே தற்போது மூதாட்டியை வந்து பார்த்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…