18 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு கத்தியால் அறுத்து கொன்ற வழக்கில் தில்ஷாத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
உத்திரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 18 வயது சிறுமியின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். அதனையடுத்து நடந்த பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது யார் என்ற விசாரணையை போலீசார் நடத்தி வந்தனர். அப்போது, சிறுமி கடந்த சில மாதங்களாக அவரது மொபைலிருந்து தில்ஷாத் என்ற இளைஞனுடன் அடிக்கடி பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமி ஆகஸ்ட் 24-ம் தேதி சந்தைக்கு சென்ற போது அவரை பின்தொடர்ந்து தில்ஷாத் பேச முயன்றதாகவும், சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சிறுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ஒப்பு கொண்டார். அதன் பின்னர் நடந்த வாக்குவாதத்தில் அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் தொண்டையை அறுத்து கொன்றதையும் தில்ஷாத் ஒப்பு கொண்டார். குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின் படி, கொலைக்கு பயன்படுத்திய கத்தி கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் கைரேகைகள், இரத்த கறை படிந்த உடைகள் என அனைத்தும் குற்றவாளி தில்ஷான் என்பது உறுதியாகியுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…