அசாமில் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த 18 யானைகள்…!

Published by
லீனா

அசாமில், நாகான் மாவட்டத்தில் 18 யானைகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அசாமில், நாகான் மாவட்டத்தில் 18 யானைகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை இரவு நடந்துள்ளது. ஆனால் வனத்துறையினருக்கு வியாழக்கிழமை இரவுதான் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

இதுகுறித்து கதியாடோலி வனச்சரகத்தில் தலைமை வன காப்பாளர் அமித் ஷாகே  அவர்கள் கூறுகையில், அசாமின் எல்லைப்பகுதியான நாகான்-கார்பி ஆங்லாங்  எல்லையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.  புதன்கிழமை இரவு அங்கு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது இரண்டு கூட்டங்களாக இருந்த 18 யானைகள் இறந்துள்ளன. ஆனால் எங்களுக்கு நேற்றுதான் தகவல் கிடைத்தது.

14 யானைகள் வனப் பகுதியின் மேல் பகுதியிலும், நான்கு யானைகள் வனப் பகுதியின் கீழ் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். முதல்கட்ட விசாரணையில் மின்னல் தாக்கி அதில் இருந்து வந்த அதிக மின்னழுத்தம் மூலம் யானை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் யானை உடற்கூறு ஆய்வு செய்த பின் தான் இது குறித்து உண்மையான காரணங்கள் தெரியவரும் என்றும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

 மேலும் அவர் கூறுகையில், யானைகள் பொதுவாக மழைக்காலத்தில் பெரிய மரங்களின் கீழ் கூட்டமாக நிற்கும். அவ்வாறு நின்று கொண்டிருக்கும்போது மரத்தில் மின்னல் தாக்கி இருக்கலாம் .மின்னல் அதிக சக்தியுடன் தாக்கும்போது கூட்டமாக யானைகள் இறக்க வாய்ப்புள்ளது என்றும், உயிரிழந்த யானைகளில் எத்தனை ஆண் யானைகள், பெண்யானைகள் மற்றும் எத்தனை பெண் யானைகள் கர்ப்பமாக இருக்கும் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago