வாட்ஸ்அப்பில் ஆண் நண்பருடன் பேசியதற்காக சகோதரியை 17வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தனது சகோதரி ஆண் நண்பரிடம் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்ததற்காக துப்பாக்கியால் சகோதரியை சுட்டு கொன்றுள்ளார் .இந்த சம்பவம் குறித்து பேசிய துணை போலீஸ் கமிஷனர் வேத் பிரகாஷ் சூர்யா ,பள்ளியில் படித்து கொண்டே சலூன் கடையில் பணிபுரிந்து வருபவர் தான் அந்த 17 வயது சிறுவன் .இவரது 16 வயது சகோதரி தனது பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
சகோதரி தினமும் ஆண் நண்பர் ஒருவரிடம் தொலைப்பேசியில் பேசுவதையும் , வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவதையும் கண்ட சிறுவன் தனது சகோதரியை எச்சரித்துள்ளார் .ஆனால் சகோதரி மீண்டும் ஆண் நண்பருடன் பேசுவதை விடவில்லையாம் .இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் சகோதரி ஆண் நண்பருடன் பேசுவதை கண்ட சிறுவன் கண்டிக்க ,இருவரிடையே சண்டை நடந்துள்ளது . இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் சகோதரியின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார் .
உடனடியாக சிறுமியின் பெற்றோர்கள் ஜாக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர் . அதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்க சிறுவனை கைது செய்து துப்பாக்கியை கைப்பற்றினர் . அவரிடம் நடத்திய விசாரணையில் ,சிறுவன் உபயோகித்த துப்பாக்கி மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு காலமான அவரது நண்பரிடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளார்.மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி மீண்டு வருவார் என்று அதிகாரி கூறியுள்ளார்.
சென்னை : நநடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27ம் தேதி) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…