வாட்ஸ்அப்பில் ஆண் நண்பருடன் பேசியதற்காக சகோதரியை துப்பாக்கியால் சுட்ட 17 வயது சிறுவன்.!

Default Image

வாட்ஸ்அப்பில் ஆண் நண்பருடன் பேசியதற்காக சகோதரியை 17வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தனது சகோதரி ஆண் நண்பரிடம் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்ததற்காக துப்பாக்கியால் சகோதரியை சுட்டு கொன்றுள்ளார் .இந்த சம்பவம் குறித்து பேசிய துணை போலீஸ் கமிஷனர் வேத் பிரகாஷ் சூர்யா ,பள்ளியில் படித்து கொண்டே சலூன் கடையில் பணிபுரிந்து வருபவர் தான் அந்த 17 வயது சிறுவன் .இவரது 16 வயது சகோதரி தனது பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

சகோதரி தினமும் ஆண் நண்பர் ஒருவரிடம் தொலைப்பேசியில் பேசுவதையும் , வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவதையும் கண்ட சிறுவன் தனது சகோதரியை எச்சரித்துள்ளார் .ஆனால் சகோதரி மீண்டும் ஆண் நண்பருடன் பேசுவதை விடவில்லையாம் .இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் சகோதரி ஆண் நண்பருடன் பேசுவதை கண்ட சிறுவன் கண்டிக்க ,இருவரிடையே சண்டை நடந்துள்ளது . இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் சகோதரியின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார் .

உடனடியாக சிறுமியின் பெற்றோர்கள் ஜாக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர் . அதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்க சிறுவனை கைது செய்து துப்பாக்கியை கைப்பற்றினர் . அவரிடம் நடத்திய விசாரணையில் ,சிறுவன் உபயோகித்த துப்பாக்கி மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு காலமான அவரது நண்பரிடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளார்.மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி மீண்டு வருவார் என்று அதிகாரி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்