17 வயது முஸ்லீம் பெண் திருமணம்: பாலின முதிர்ச்சியே திருமணத்திற்கான சரியான வயது- உயர்நீதிமன்றம்!

Published by
murugan

முஸ்லீம் பெண் பருவமடைந்த பிறகு யாரையும் திருமணம் செய்துகொள்ளலாம் என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது முஸ்லீம் பெண் ,33 வயதுடைய இந்து இளைஞரை  திருமணம் செய்துக்கொண்டார். இந்தத் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர்  எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குடும்ப உறுப்பினர்களை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொண்டதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு அளிக்கக் கோரி அந்த பெண் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முஸ்லீம் சட்டப்படி இளைஞர்களும் முதிர்ச்சியும் ஒன்றுதான் என்று வாதிட்டார். இதன்படி பருவ வயதை அடையும் எந்த இஸ்லாமிய ஆண் அல்லது பெண் யாரையும் திருமணம் செய்து கொள்ள சுதந்திரம் உள்ளது என்றும் கூறினார். இதில் தலையிட அவரது குடும்பத்தினருக்கு உரிமை இல்லை. எனவே அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கில், முகமதிய சட்டக் கோட்பாடுகளின்படி, 15 வயதுடைய பெண் பாலின முதிர்ச்சி அடைந்த பிறகே திருமணத்திற்குத் தகுதியுடையவராகக் கருதப்படும் என்று தெளிவுபடுத்தியது. இந்த வழக்கில் சிறுமிக்கு 17 வயது. மனுதாரர் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக சென்று திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை பறித்துவிட முடியாது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், தம்பதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மலேர்கோட்லா எஸ்எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளது.

 

 

Published by
murugan

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

24 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago