நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெகாசஸ் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இன்று விவசாயிகள் பிரச்சனை முடங்கியுள்ளது.
கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 13-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகளை மையப்படுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இன்று விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக விவாதிக்கவும் திட்டமிட்டிருந்தனர். பின்னர் இன்று நடந்த கூட்டத்திலும் முதலில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கூறி கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இதனால் 16 ஆவது நாளாக மழைக்கால கூட்டத்தொடர் முடங்கியது.
மேலும், பிற்பகல் 12 மணி வரை இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அவையை ஒத்தி வைப்பதற்கு முன், விவசாயிகள் பிரச்சனைக்கு இந்த அவை கவலைப்படுவதில்லை என்ற தகவல் மக்களுக்கு சேரக்கூடாது. இதற்கு அவை உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…