நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம்.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக 3 ஆம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அறிவித்தது. கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்தாலும், இந்த ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகளுடன் கூடிய புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிடப்பட்டது. இதனிடையே கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை தினமும் அறிவித்து வருகிறது.
அதன்படி, இன்று நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 52,952 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1,783 ஆகவும் உள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,267 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 16,758 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 651 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3,094 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு கொரோனா பரவி வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 1233 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு 16,758 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவை மாநிலமாக கொண்ட மும்பை மற்றும் புனேவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகபட்சமாக ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…