இந்தியாவில் வெங்காயத்தின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் ஆந்திராவில் பெண் ஒருவர் தனது 5 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு கடைக்கு வெங்காயம் வாங்க சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமி தாய் வெளியே சென்றதால் பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்றுள்ளார்.அப்போது அந்த வீட்டில் இருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் சிறுமியின் வாயில் துணியை வைத்து பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த தாய்க்கு நடந்த சம்பவம் குறித்து தெரிய வர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதன் காரணமாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அண்மையில் பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் திஷா சட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில் இந்த சட்டம் நிறைவேறிய பின்னர் நடந்த முதல் கைது சம்பவம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…