இந்தியாவில் வெங்காயத்தின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் ஆந்திராவில் பெண் ஒருவர் தனது 5 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு கடைக்கு வெங்காயம் வாங்க சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமி தாய் வெளியே சென்றதால் பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்றுள்ளார்.அப்போது அந்த வீட்டில் இருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் சிறுமியின் வாயில் துணியை வைத்து பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த தாய்க்கு நடந்த சம்பவம் குறித்து தெரிய வர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதன் காரணமாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அண்மையில் பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் திஷா சட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில் இந்த சட்டம் நிறைவேறிய பின்னர் நடந்த முதல் கைது சம்பவம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…