குஜராத் அரசு விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்க ரூ1,500 வரை நிதியுதவி என அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1500 நிதியுதவி வழங்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவல், மாநில வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் டிஜிட்டல் சேவையின் போக்கு அதிகரித்து வரும் இவ்வேளையில், ஸ்மார்ட் போன்களை வாங்க விவசாயிகளை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்றும், இதன் மூலம் விவசாய வருவாயை அதிகரிக்க முடியும் என்றும் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் நலன் மற்றும் கூட்டுறவுத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், குஜராத்தில் நிலம் வைத்திருக்கும் எந்தவொரு விவசாயியும் ஸ்மார்ட்போன் வாங்க 1,500 நிதிஉதவி வழங்கப்படும் எனவும், பவர் பேங்க் , இயர்போன்கள் அல்லது சார்ஜர்கள் போன்ற இணைக்கப்பட்ட சாதனங்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்காது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு, வேளாண்மைத் துறையின் பல்வேறு திட்டங்கள், நவீன விவசாயத் தொழில் நுட்பங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளைப் பற்றிய தகவல்களைப் பெற இந்த ஸ்மார்ட்போன் விவசாயிகளுக்கு எளிதாக உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…