ராஜஸ்தானில் தாளாளரை கொல்ல முயன்ற 15 வயது சிறுவன் கைது..!

Default Image

ராஜஸ்தானில் தாளாளரை துப்பாக்கியால் கொலை செய்ய முயன்றதாக 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

ராஜஸ்தானில் ஒரு தனியார் பள்ளிக்கு 15 வயது மாணவன் பள்ளியின் தாளாளர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு அந்த சிறுவன் தாளாளரை துப்பாக்கியால் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. தாளாளர் சத்தம் கேட்டு அங்கு வந்த பள்ளி ஊழியர்கள் அந்த சிறுவனை பிடித்து காவல்துறைக்கு தகவல்  தெரிவித்தனர்.

உயர் போலீஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை கைது செய்தனர். அவர் மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  எஸ்பி கேசர் சிங் தெரிவித்துள்ளார். ஓராண்டுக்கு முன்பு  அந்த பள்ளியில் இருந்து அந்த சிறுவன் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்