பாஜக பிரமுகர் கொலை வழக்கு – கேரளாவில் 15 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

கேரளாவில் பாஜக பிரமுகர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்து ஆழப்புழா மாவட்டம் மாவெலிகாரா கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில தலைவரும், வழக்கறிஞருமான ரஞ்சித் ஸ்ரீனிவாசன், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி காலை ஆலப்புழா நகராட்சி வெள்ளக்கிணற்றில் உள்ள தனது வீட்டில் மிககொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். அதுவும், அவரது தாய், மனைவி மற்றும் மகள் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டார்.

எஸ்டிபிஐ மாநில செயலாளர் கே.எஸ்.ஜான் கொலைக்கு பழிக்கு பழியாக ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. எனவே, ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ-க்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஹேமந்த் சோரன் எங்கே? ஜார்கண்ட்டின் அடுத்த முதல்வர் இவர்தான்?… பாஜகவின் நிஷிகாந்த் துபே பேட்டி!

இந்த நிலையில், ரஞ்சித் ஸ்ரீனிவாசன் குடும்பத்தார் முன்னிலையில் கொல்லப்பட்ட வழக்கில் ஆழப்புழா மாவட்டம் மாவெலிகாரா கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் நீதிபதி ஸ்ரீதேவி வி.ஜி தீர்ப்பு வழங்கினார். அதில், நைசாம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லம், அப்துல் கலாம் என்ற சலாம், அப்துல் கலாம், சஃபாருதீன், மன்ஷாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி பூவத்துங்கல், ஷெர்னாஸ் அஷ்ரப் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆலப்புழாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குற்றவாளிகள், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் கொலை வழக்கை, ஆலப்புழா எஸ்பி தலைமையிலான சிறப்புக் குழு விசாரித்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பிரதாப் ஜி.படிக்கல் மற்றும் வழக்கறிஞர்கள் ஸ்ரீதேவி பிரதாப், ஷில்பா சிவன், ஹரீஷ் காட்டூர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago