உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி, முக்கிய விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என ஏரளாமானோர் நேற்று அயோத்தியில் ராமரை பார்க்க குவிந்தனர்.
பெரும் சர்ச்சைக்கும், எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அயோத்தியில் திறக்கப்பட்ட ராமர் கோயிலில், இன்று முதல் பக்தர்கள் தரிசிக்கலாம் என கூறப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் வருகை புரிந்து, நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.
தற்பொழுது, ராமர் சிலைக்கு எவ்வளவு நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ராமரை ஐந்து வயது குழந்தையாக சித்தரிக்கும் ராமர் சிலையின் பிரதிபலிக்கும் அற்புதமான நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த நகைகள் செய்வதற்கு 15 கிலோ தங்கம் மற்றும் 18,000 வைரங்கள் மற்றும் மரகதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அயோத்தி ஹனுமன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
சிலைக்கு ஒரு கிரீடம், நான்கு நெக்லஸ்கள், ஒரு இடுப்புப் பட்டை, இரண்டு ஜோடி கணுக்கால்கள், விஜய் மாலா, இரண்டு மோதிரங்கள் என மொத்தம் 14 துண்டுகள் கொண்ட அற்புதமான நகைகள் வெறும் 12 நாட்களில் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்கத்தால் ஆன காப்பு, கவசங்கள் சிலையை அலங்கரிக்கின்றன. அது மட்டும் இல்லமால் தங்க அம்பு ஒன்றையும் ராமர் ஏந்தியிருக்கிறார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…