குஜராத்தில், பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனாவால் இறப்பு…!

Published by
Edison

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு  இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸின் 2 வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதற்கிடையில் மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லாமல் டாக்டர்கள் திண்டாடி வருகின்றனர்.இதனை தொடர்ந்து,வியாழக்கிழமை சூரத் நகரில் 26 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.மேலும் 1,551 பேர் புதிதாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியில் உள்ள டயமண்ட் மருத்துவமனையில்,பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனா வைரஸினால் பாதிக்கபட்டு இறந்துள்ளது.

இதுகுறித்து டயமண்ட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,”ஏப்ரல் 1 ஆம் தேதியன்று பிறந்த அப்பெண் குழந்தை பிறக்கும் போதே கொரோனா வைரஸ் தொற்றுடன்தான் பிறந்தது.ஏனெனில் அக்குழந்தையின் தாயும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.அதன் பின்னர், குழந்தையின் தாய் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும்,அப்பெண் குழந்தை வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டு,ரெமெடிசிவிர் என்ற கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டிருந்தது.இதனையடுத்து,சிகிச்சை பலனளிக்காமல் அக்குழந்தை வியாழக்கிழமையன்று இறந்தது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Edison

Recent Posts

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

2 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

6 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

27 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

27 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

39 mins ago

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

1 hour ago