மகாராஷ்டிராவில் மேலும் 14,492 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது- சுகாதாரத்துறை அமைச்சகம்!

Default Image

மகாராஷ்டிராவில் மேலும் 14,492 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 14,492 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,71,942 ஆக உயர்ந்தது.

அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 297 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,995 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 9,241 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,80,114 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,69,516 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்