Categories: இந்தியா

சபரிமலை சர்ச்சை……….வெடித்த வன்முறை……சபரிமலையில் 144 தடை உத்தரவு……பதற்றத்தில் கேரளா….!!!

Published by
kavitha

கேரளா சபரிமலை தீர்ப்பை எதிர்த்து ஏற்பட்ட வன்முறையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Image result for sabarimala judgement
கேரளா நிலக்கல் பகுதியில் இன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து நிலக்கல், பம்பை, சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டங்களில் சிலர் வன்முறையிலும் ஈடுபட்டனர்.இந்நிலையில் செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிக்கையாளர் மீதும் தாக்குதல் நடத்தினர்.

 
இந்நிலையில்  உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு முதன்முறையாக துலாம் மாத பூஜைக்காக இன்று மாலை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. முன்னதாக நிலக்கல் பகுதியில் பெண் பக்தர்களை சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க மறுத்து, இந்து அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.
போராட்ட பந்தலை அகற்றியதால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பம்பைக்குச் சென்ற கேரள அரசு பேருந்துகளில் பெண்கள் இருந்ததால், அப்பகுதியில் இருந்த சிலர் ஒன்று கூடி பேருந்தை முற்றுகையிட்டனர். பின்னர், அப்பேருந்தை திருப்பி அனுப்பியுள்ளனர்.
கேரள போலீசார், பேருந்துகளை முற்றுகையிட்டவர்களை கைது செய்தனர். இந்த பதற்றமான சூழ்நிலையில் இன்றிரவு முதல் நாளை மாலை வரை நிலக்கல், பம்பை, சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூகு அறிவித்துள்ளார். பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

22 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago