தந்தையின் இயலாமையால் தானே ரிக்க்ஷா ஒட்டி சம்பாதிக்கும் 14 வயது சிறுமி

Published by
Rebekal

பீகார் மாநிலத்தில் தந்தையால் தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் ஊரடங்கு நேரத்திலும் ரிக்க்ஷாவை ஓட்டி குடும்பத்தை கவனித்து வரும் 14 வயது சிறுமியின் செயல் வியக்க வைக்கிறது.

கொரானா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதுமே அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பீகார் மாநிலம் சசாரம் என்னும் மாவட்டத்தில் தொடர்ந்து இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் தனது தந்தையால் வேலை செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் நந்தினி குமாரி எனும் 14 வயது சிறுமி தானே தனது தந்தையின் வாடகை ரிக்ஷாவை அழுத்தி பயணிகளை ஏற்றி குடும்பத்திற்கு செலவு  பணத்தை உழைத்து கொடுக்கிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஊரடங்கு நேரத்தில் எனது தந்தையே நான் ரிக்ஷ ஓட்ட அனுமதிக்கவில்லை, ஏனென்றால் காவல் துறையினருக்கு பயமாக உள்ளது, அதனால் தான் அதற்கு பதிலாக நானே அவரது வேலையை ஒரு மாதமாக செய்கிறேன் என அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தினசரி கூலியாக தற்பொழுது வேலை செய்து வருகிறாராம். 12 மணிநேரம் வேலை செய்வதாகவும், ஒரு நாளில் 100 முதல் 200 ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் நந்தினி கூறியுள்ளார்.

படிக்காத பெண் என்றாலும் அனைத்து விதிகளையும் பின்பற்றக்கூடிய கெட்டிக்கார சிறுமியாக இவர் உள்ளாராம். எந்த இடத்துக்கு போக வேண்டும் என்று கூறினாலும் அதன் பாதைகளையும் வழிகளையும் நன்கு அறிந்தவராக இவர் உள்ளாராம். மேலும் ஆண்கள் ஓட்டக்கூடிய ரிக்ஷாவை விடத்தான் ஓட்டக்கூடிய ரிக்ஷாவில் பயணிக்க பெண்கள் அதிகம் விரும்புவதாகவும், அவர்களுடைய தைரியம் மற்றும் மனக் கவலையால் அதிகம் பேர் ஈர்க்கப்பட்டு இவள் ரிக்ஷாவிற்கு தான் வருகிறார்கள் எனவும் அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் கூறியுள்ளனர் .

Published by
Rebekal

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

16 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

16 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

16 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே? வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

16 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

17 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

17 hours ago