14 வயது சிறுமி வன்கொடுமை.. அண்ணன் உட்பட 4 பேர் கைது..!

Published by
murugan

மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் செய்த வழக்கில் சகோதரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானின் நாகூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 14 வயது சிறுமிக்கு அஜ்மீரில் உள்ள சனனா மருத்துவமனையில் குழந்தை பிறந்ததை தொடர்ந்து, சிறுமியின் பிரசவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியின் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேருடன் அவரது சகோதரர் பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமி கூறினார். இந்த விஷயத்தை சிறுமியின் உறவினர்கள் மறைத்து வைத்தாக போலீசார் தெரிவித்தனர்.

சிறுமியின் வாக்குமூலம் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் அவரது சகோதரர் மற்றும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். டி.என்.ஏ சோதனைக்குப் பிறகு வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Published by
murugan

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

8 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

9 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

10 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

11 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

12 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

13 hours ago