டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 14 பேர் உயிரிழப்பு!

Default Image

டெல்லியில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து கொண்டே வருகின்றது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 1,412 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,60,016 ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,230 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,44,138 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,284 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் 11,594 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்