“13 வயது சிறுமியின் மார்பகங்கள் வளர்ச்சியடையவில்லை;ஆனால்…” – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published by
Edison

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் மார்பகங்கள் வளர்ச்சியடையவில்லை என்றாலும்,பாலியல் நோக்கத்துடன் பெண்களின் உடலின் அந்தரங்க பகுதியைத் தொடுவது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

தனிமையில் சிறுமி:

மேற்கு வங்கத்தில் வசிக்கும் 13 வயது சிறுமியின் தாயின் புகாரின் அடிப்படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.மேற்கு வங்கத்தில் 13 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோதுஅருகில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டில் நுழைந்து தகாத முறையில் சிறுமியை தொட்டதாகவும்,முகத்தில் முத்தமிட்டதாகவும்,மேலும் பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாகவும் கூறப்படுகிறது.எனினும்,உடனே சிறுமி கூச்சலிட்டதை தொடர்ந்து அந்நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

பாய்ந்த போக்சோ:

அதன்பின்னர்,நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியதையடுத்து,சம்மந்தப்பட்ட நபர் மீது காவல்நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார்.இதன் காரணமாக,அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.

சிறுமியின் மார்பகங்கள் உருவாகவில்லை:

இந்நிலையில்,இந்த தொடர்பான வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர் மைனர் சிறுமியை தவறாகத் தொட்டு முத்தமிட்டதாகவும்,வழக்கு விசாரணையின் போது, ​​சிறுமியின் மார்பகங்கள் உருவாகவில்லை என வழக்கின் மருத்துவ அதிகாரி சாட்சியம் அளித்ததையடுத்து வழக்கை தள்ளுபடி செய்யுமாறு குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வளர்ந்ததா,இல்லையா முக்கியமற்றது:

இதனை விசாரித்த நீதிபதி பிபேக் சவுத்ரி,”13 வயது சிறுமியின் மார்பகங்கள் வளர்ந்ததா இல்லையா என்பது முற்றிலும் முக்கியமற்றது.ஆனால்,ஒரு குழந்தையின் பிறப்புறுப்பு மற்றும் மார்பகங்களைத் தொடுவது அல்லது பாலியல் நோக்கத்துடன் குழந்தையைத் தொடச் செய்வது பாலியல் வன்கொடுமையின் குற்றமாகும்.

எனவே,உடலுறவு கொள்ளாவிட்டாலும் பெண்ணின் அந்தரங்க பகுதியை தொடுவது பாலியல் வன்கொடுமையின்கீழ் வரும்.மேலும்,போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்திருப்பது சரியே”,என்று தீர்ப்பளித்துள்ளது.

 

Recent Posts

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…

6 minutes ago

தென் மாவட்டங்களை சூழும் கருமேகம்… இன்று 6 மாவட்டங்களில் கனமழை!!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…

26 minutes ago

தெலுங்கானா சுரங்க விபத்து : மீட்பு பணிகளின் நிலை என்ன?

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…

38 minutes ago

இதெல்லாம் நடக்குற கதையா? மழையால் தகர்ந்த ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு!

கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…

1 hour ago

பிரதமர் மோடி முதல்… தவெக தலைவர் விஜய் வரை.! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…

2 hours ago

அதிமுக நோ., விஜய் தான் டார்கெட்? திமுக கூட்டணி கட்சியினர் கடும் விமர்சனம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…

2 hours ago