“13 வயது சிறுமியின் மார்பகங்கள் வளர்ச்சியடையவில்லை;ஆனால்…” – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published by
Edison

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் மார்பகங்கள் வளர்ச்சியடையவில்லை என்றாலும்,பாலியல் நோக்கத்துடன் பெண்களின் உடலின் அந்தரங்க பகுதியைத் தொடுவது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

தனிமையில் சிறுமி:

மேற்கு வங்கத்தில் வசிக்கும் 13 வயது சிறுமியின் தாயின் புகாரின் அடிப்படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.மேற்கு வங்கத்தில் 13 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோதுஅருகில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டில் நுழைந்து தகாத முறையில் சிறுமியை தொட்டதாகவும்,முகத்தில் முத்தமிட்டதாகவும்,மேலும் பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாகவும் கூறப்படுகிறது.எனினும்,உடனே சிறுமி கூச்சலிட்டதை தொடர்ந்து அந்நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

பாய்ந்த போக்சோ:

அதன்பின்னர்,நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியதையடுத்து,சம்மந்தப்பட்ட நபர் மீது காவல்நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார்.இதன் காரணமாக,அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.

சிறுமியின் மார்பகங்கள் உருவாகவில்லை:

இந்நிலையில்,இந்த தொடர்பான வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர் மைனர் சிறுமியை தவறாகத் தொட்டு முத்தமிட்டதாகவும்,வழக்கு விசாரணையின் போது, ​​சிறுமியின் மார்பகங்கள் உருவாகவில்லை என வழக்கின் மருத்துவ அதிகாரி சாட்சியம் அளித்ததையடுத்து வழக்கை தள்ளுபடி செய்யுமாறு குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வளர்ந்ததா,இல்லையா முக்கியமற்றது:

இதனை விசாரித்த நீதிபதி பிபேக் சவுத்ரி,”13 வயது சிறுமியின் மார்பகங்கள் வளர்ந்ததா இல்லையா என்பது முற்றிலும் முக்கியமற்றது.ஆனால்,ஒரு குழந்தையின் பிறப்புறுப்பு மற்றும் மார்பகங்களைத் தொடுவது அல்லது பாலியல் நோக்கத்துடன் குழந்தையைத் தொடச் செய்வது பாலியல் வன்கொடுமையின் குற்றமாகும்.

எனவே,உடலுறவு கொள்ளாவிட்டாலும் பெண்ணின் அந்தரங்க பகுதியை தொடுவது பாலியல் வன்கொடுமையின்கீழ் வரும்.மேலும்,போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்திருப்பது சரியே”,என்று தீர்ப்பளித்துள்ளது.

 

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

1 hour ago
GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

2 hours ago
RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

3 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

4 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

7 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

8 hours ago