8 மாதகாலமாக 80 ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி மீட்பு …!

Published by
Rebekal

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 8 மாதங்களுக்கு மேலாக 80-க்கும் மேற்பட்ட ஆண்கள் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சியான சம்பவம் தெரியவந்துள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் விடுதி ஒன்றில் இருந்து 13 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சிறுமியிடம் விசாரணை செய்ததில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக இந்த விபச்சார விடுதிக்குள் சிறுமி தள்ளப்பட்டிருப்பதும், அவரை 80க்கும் மேற்பட்ட ஆண்கள் பலாத்காரம் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக போலீசார் தெரிவித்துள்ள தகவலின்படி, குற்றத்தில் ஈடுபட்ட 80 பேரையும் போலீசார் கைது செய்துள்ளதாகவும், மேலும் தப்பியோடியுள்ள சிலரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றுஏற்பட்ட போது மருத்துவமனையில் தனது தாய்க்கு பழக்கமாகிய பெண் தான் சவர்ண குமாரி  எனவும், தனது தாய்  கொரோனா தொற்றால் இறந்த பின்பு எனது தந்தைக்கு தெரியாமல் அழைத்து சென்று விடுதியில் விட்டு விட்டார் எனவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமி இருக்கும் விடுதியை கண்டறிந்து மீட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு முக்கிய குற்றவாளியான சவர்ண குமாரி என்ற பெண்ணையும் போலீசார் தற்பொழுது அடையாளம் கண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

18 minutes ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

3 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

3 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

4 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

14 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

15 hours ago