சத்தீஸ்கர் காவல்துறையினர், மாநிலத்தின் 4 மாவட்டங்களில் 13 திருநங்கைகளை கான்ஸ்டபிளாக நியமித்துள்ளனர்.
2019-2020 ஆம் ஆண்டிற்கான கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில், சத்தீஸ்கர் காவல்துறையினர், மாநிலத்தின் 4 மாவட்டங்களில் 13 திருநங்கைகளை கான்ஸ்டபிளாக நியமித்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குனர் ஜெனரல் டி.எம் அவஸ்தி அவர்கள் கூறுகையில், கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்வுக்கு தகுதி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். திருநங்கைகளை நாங்கள் முதன்முறையாக கான்ஸ்டபிளாக நியமித்துள்ளோம். அவர்களை தனிப்பட்ட முறையில் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தெரிவுசெய்யப்பட்ட திருநங்கைகளில் ஒருவர் கூறுகையில், ‘நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் மகிழ்ச்சியை வெளிபடுத்த எனக்கு வார்த்தை இல்லை. நானும் எனது சக ஊழியர்களும் இந்த தேர்வுக்கு மிகவும் கடினமாக உழைத்தோம். இது எங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு அரிய வாய்ப்பாகும் என்று தெரிவித்துள்ளார். இதற்குமுன் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் தலா ஒரு திருநங்கை காவலராக தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…