கர்நாடகா : மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் பியாடகி தாலுகாவில் நின்று கொண்டிருந்த டிரக் மீது மினிபஸ் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 2 பேர் காயமடைந்தனர். 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஹாவேரி மாவட்டம் குண்டேனஹள்ளி கிராசிங் அருகே அதிகாலை 3.45 மணியளவில் மினி பேருந்தில் 17 பேர் பயணம் செய்தனர். அப்போது, புனித யாத்திரைக்காக பெலகாவி மாவட்டத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் விபத்து ஏற்பட்டது.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். விபத்துக்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், மினி பஸ்ஸின் டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், விபத்து குறித்து தெளிவான காரணம் வெளியாகவில்லை என்பதால் கூடுதலாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விபத்தில் பலியானவர்கள் ஷிவமொக்காவை சேர்ந்தவர்கள் என்றும், பெலகாவி மாவட்டத்தில் உள்ள சவதாட்டியில் இருந்து யாத்திரை சென்று யல்லம்மா தேவியை தரிசனம் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்றும் போலீசார் தகவலை தெரிவித்தனர்.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…