கர்நாடகாவில் நடந்த கோர விபத்து! 13 பேர் பலி…2 பேர் காயம்!

karnataka accident

கர்நாடகா :  மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் பியாடகி தாலுகாவில் நின்று கொண்டிருந்த டிரக் மீது மினிபஸ் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 2 பேர் காயமடைந்தனர். 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஹாவேரி மாவட்டம் குண்டேனஹள்ளி கிராசிங் அருகே அதிகாலை 3.45 மணியளவில் மினி பேருந்தில் 17 பேர் பயணம் செய்தனர். அப்போது, புனித யாத்திரைக்காக பெலகாவி மாவட்டத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் விபத்து ஏற்பட்டது.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். விபத்துக்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், மினி பஸ்ஸின் டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், விபத்து குறித்து தெளிவான காரணம் வெளியாகவில்லை என்பதால் கூடுதலாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விபத்தில் பலியானவர்கள் ஷிவமொக்காவை சேர்ந்தவர்கள் என்றும், பெலகாவி மாவட்டத்தில் உள்ள சவதாட்டியில் இருந்து யாத்திரை சென்று யல்லம்மா தேவியை தரிசனம் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்றும் போலீசார் தகவலை தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்