பிரதமர் மோடி வெளியிட்ட 125 ரூபாய் சிறப்பு நாணயம்…!எதற்காக தெரியுமா?..!

Published by
Edison

பிரதமர் நரேந்திர மோடி,காணொலி  மூலம் 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு காணொலி  மூலம் பிரதமர் நரேந்திர மோடி 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து,பிரதமர் கூறுகையில்:

“நேற்று கிருஷ்ண ஜெயந்தி, இன்று நாம் ஸ்ரீல பிரபுபாதரின் 125 வது பிறந்த நாளை கொண்டாடுகிறோம்.இதனால், மகிழ்ச்சியும் மனநிறைவும் ஒன்றாக கலப்பது போல் உள்ளது.

இந்த உணர்வு இன்று ஸ்ரீல பிரபுபாத சுவாமியின் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களாலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான கிருஷ்ண பக்தர்களாலும் உணரப்படுகிறது.பிரபுபாத ஸ்வாமி கிருஷ்ணரின் அமானுஷ்ய பக்தர் மட்டுமல்ல, அவர் பாரதத்தின் சிறந்த பக்தரும் ஆவார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அவர் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்.மேலும்,அவர் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாக ஸ்காட்டிஷ் கல்லூரியில் இருந்து டிப்ளமோ படிக்க மறுத்துவிட்டார்”,என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாஜி, “கிருஷ்ணா இயக்கம்” என்று பொதுவாக அறியப்படும் இஸ்கான் (கிருஷ்ண உணர்வுக்கான சர்வதேச சங்கத்தை) நிறுவினார்.இந்த சங்கம் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் இதர வேத இலக்கியங்களை 89 மொழிகளில் மொழி பெயர்த்து, வேத இலக்கியத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் சிறப்பான பங்கை வகிக்கிறது.

மேலும்,சுவாமி பிரபுபாதாஜி நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை நிறுவி, பல புத்தகங்களை எழுதி, பக்தி யோகாவின் பாதையை உலகிற்கு கற்பித்தார்.மேலும்,இவரது நூல்கள் உலக பாடசாலைகள் பலவற்றில் மேற்படிப்புக்கான பாடப் புத்தகங்களாக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,அவரது 125 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை இன்று வெளியிட்டுள்ளார்.

Recent Posts

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

48 mins ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

1 hour ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

2 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

2 hours ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

2 hours ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

3 hours ago