பிரதமர் நரேந்திர மோடி, 125 கோடி இந்தியர்களின் கனவுகளை நனவாக்க, பா.ஜ.க. அரசு இரவு பகலாக உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக ஸ்வீடன் சென்றிருந்த பிரதமர் மோடி, ஸ்டாக்ஹோம் பல்கலைக் கழகத்தில் இந்திய வம்சாவளியினரிடையே பேசினார். அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்வீடன் பிரதமர் நமஸ்கார் என வரவேற்றார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய மோடி, இந்தியாவில் மொழி, பண்பாடு தனித்தனியாக இருந்தாலும், இந்தியர் என்ற பெருமிதம் ஒன்றிணைப்பதாக குறிப்பிட்டார். இந்த ஒற்றுமை உணர்வால்தான் மேரிகோம்,சாய்னா நேவால் போன்றோரின் சாதனைகளை அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்கிறார்கள் என மோடி சுட்டிக் காட்டினார்.
இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இரவையும் பகலையும் பாராமல் உழைக்கக் கூடிய ஒரு அரசு இப்போது இந்தியாவில் உள்ளது என்றும், மக்களின் கனவுகள் நனவாக ஓயாமல் பாஜக அரசு உழைக்கிறது என்றும் மோடி தெரிவித்தார்.
உலகின் 5 மிகச்சிறந்த விண்வெளித் திட்டங்களின் வரிசையில் இந்தியா இடம் பிடித்துள்ளதாக கூறிய பிரதமர், இந்நாட்டின் தொழில்நுட்பத்திறனை உலகமே வியந்து பார்ப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ஸ்வீடன் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி விமானம் மூலம் லண்டனுக்குப் புறப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…