இனிமேல் பொது இடத்தில் எச்சில் துப்பினால் 1,200 ரூபாய் அபராதம்!

Published by
Rebekal

இனிமேல் பொது இடத்தில் எச்சில் துப்புபவர்களுக்கு 1200 ரூபாய் அபராதமாக வசூலிக்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாம்.

மும்பை மாநகராட்சியில் ஏற்கனவே பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் இந்த அபராத தொகையை 1200 ஆக அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ள நிலையில் இது குறித்து கமிஷனர் இக்பால் அண்மையில் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் மும்பை மாநகராட்சியில் பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது 1200 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.

இருப்பினும் இந்தத் திட்டத்திற்கு மாநகராட்சி பொது குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். அவ்வாறு அதிகாரப்பூர்வமாக அளித்தால் இனிமேல் பொது இடங்களில் அத்து மீறுபவர்கள் மீது ஆயிரத்து இருநூறு ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இதுவரை மும்பை மாநகராட்சியில் பொது இடங்களில் எச்சில் துப்பியவர்கள் மீது 200 ரூபாய் வசூலித்ததில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாம்.

Published by
Rebekal

Recent Posts

சூர்யாவுக்கு ஆசையை காட்டிய ஆரஞ்சு கேப்…கொஞ்ச நேரத்தில் பிடுங்கிய விராட் கோலி!

சூர்யாவுக்கு ஆசையை காட்டிய ஆரஞ்சு கேப்…கொஞ்ச நேரத்தில் பிடுங்கிய விராட் கோலி!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…

2 minutes ago

எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை… உணர்ச்சிவசப்பட்ட காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா!

டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

37 minutes ago

ராஜினாமா செய்ய தயாரா? பாஜகவுக்கு சவால் விட்ட செல்வப்பெருந்தகை!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…

1 hour ago

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…

2 hours ago

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

3 hours ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

3 hours ago