கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அச்சத்தால் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட தம்பதிகளால் ஆதரவற்று நிற்கும் 12 வயது சிறுவன்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களுக்கு கொரோனா வந்துவிட்டால் அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்தது என்று தங்களது உயிரை வெவ்வேறு விதங்களில் மாய்த்துக் கொள்கின்றனர். அதுபோல ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆந்திராவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த பனிராஜ் என்பவரது தாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக பனிராஜிக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இருவரும் தாயார் உயிர் இழந்த அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவியும் அவரும் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் வழியிலேயே உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு ஒரு 12 வயது மகன் இருந்துள்ளார், தற்பொழுது பெற்றோர்கள் இல்லாத நிலையில் சிறுவன் ஆதரவற்ற நிலையில் உள்ளார்.
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…