கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அச்சத்தால் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட தம்பதிகளால் ஆதரவற்று நிற்கும் 12 வயது சிறுவன்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களுக்கு கொரோனா வந்துவிட்டால் அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்தது என்று தங்களது உயிரை வெவ்வேறு விதங்களில் மாய்த்துக் கொள்கின்றனர். அதுபோல ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆந்திராவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த பனிராஜ் என்பவரது தாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக பனிராஜிக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இருவரும் தாயார் உயிர் இழந்த அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவியும் அவரும் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் வழியிலேயே உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு ஒரு 12 வயது மகன் இருந்துள்ளார், தற்பொழுது பெற்றோர்கள் இல்லாத நிலையில் சிறுவன் ஆதரவற்ற நிலையில் உள்ளார்.
அகமதாபாத் : நேற்று, (மார்ச் 24) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும்…
அகமதாபாத் : நேற்று ஐபிஎல் ஆட்டத்தில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.…
சென்னை : நேற்று தலைநகர் சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுமார் 7,8 இடங்களில் நடந்த…
சென்னை : தமிழக அரசியலில் மிக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையிலேயே அவசரமாக…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…