அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 3)-ஆம் தேதி பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தும் லாரியும் மோதியதில் 5 பெண்கள் மற்றும் ஒரு மைனர் பையன் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 5 மணி அளவில் பயணிகளை ஏற்று செல்லும் பேருந்து 45 பேருடன் கோலாகாட்டில் இருந்து டின்சுகியா நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பகுதியில் எதிர் திசையில் இருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்துள்ளது. அந்த லாரியின் மீது பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து நேருக்கு நேர் மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்கள்.
பெட்ரோல் தட்டுப்பாடு… குதிரையில் உணவு டெலிவரி.. வைரலாகும் வீடியோ..!
இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் உட்பட 2 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். விபத்தில் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருக்கிறார்கள். காயமடைந்த அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து ஏற்பட்ட இந்த பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் பரலுகுவா கிராமத்தைச் சேர்ந்தவர்கள்எனவும், அவர்கள் தின்சுகியாவில் உள்ள திலிங்க கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது எனவும் அதிகாரிகள் தகவலை தெரிவித்தனர்.
கவனக்குறைவாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதால் மரணம் ஏற்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையைத் தொடங்குவோம் என்றும் கோலாகாட் காவல் கண்காணிப்பாளர் ராஜேன் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…