12 மணி நேர வேலை, 15 நிமிடத்திற்கு அதிகமாக பணியாற்றினால் ஓவர் டைம் – புதிய ஊதிய குறியீடு மசோதா!

Published by
Rebekal

தற்போது 15 நிமிடத்திற்கு பின் ஒரு நிமிடம் அதிகமாக பணியாற்றினாலும் அது ஓவர்டைம் வேலையாக கணக்கிடப்பட்டு ஊதியம் அளிக்கப்பட்ட வேண்டும் என புதிய ஊதிய குறியீடு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

வேலை நேரம், ஊதிய அமைப்பு, வீட்டுக்கு செல்ல கூடிய நேரம், சம்பளம், வருங்கால வைப்பு நிதி என ஊதிய குறியீடு மசோதாவில் அவ்வப்போது  ஊழியர்களுக்கான பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்பொழுது மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய ஊதிய குறியீடு மசோதாவில் தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அதன்படி அதிகபட்ச வேலை நேரம் 12 மணி நேரம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த 12 மணி நேரம் வேலை அமல்படுத்தப்பட்டால், வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும் மற்ற மூன்று நாட்கள் விடுப்பு எடுத்து கொள்ளலாம்.

முன்பிருந்த கணக்கீட்டின் படி, இந்த 12 மணி நேர வேலையை தவிர்த்து 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வேலை செய்தாலும் அது கூடுதல் நேர வேலையாக கருதப்படாது, அதற்கான ஊதியமும் கிடையாது. ஆனால், தற்பொழுது 12 மணி நேர வேலையை தவிர்த்து 15 நிமிடத்திற்கு மேல் 1 நிமிடம் வேலை செய்தால் கூட அது ஓவர் டைம் வேலையாக கணக்கிடப்பட்டு அதற்கு கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 மணி நேரத்திற்கு அதிகமாக தொடர் வேலை செய்யக்கூடிய முறை தடை செய்யப்பட்டுள்ளதுடன், கட்டாயம் 5 மணி நேரத்திற்கு ஒருமுறை 30 நிமிட இடைவேளை அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கை ஏப்ரல் 1 ஆம் தேதியே அமலாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும், கொரோனா பரவல் காரணமாக சில நிறுவனங்களில் மட்டுமே இந்த நடைமுறை கொண்டுவர பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

21 minutes ago

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

2 hours ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

3 hours ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

4 hours ago

இபிஎஸ் தலைமையில் மா.செ கூட்டம்.! முதல் வரிசையில் செங்கோட்டையன்!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…

4 hours ago

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…

5 hours ago