என் தற்கொலைக்கான காரணம் இதுதான்.. விரக்தியில் தற்கொலை செய்த 11ஆம் வகுப்பு மாணவி..!

Default Image

உத்திரப்பிரதேச மாநிலம் மெயின் ரோடு அருகே இருக்கும் பள்ளி விடுதியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகம், காவல்துறையினரிடம் புகார் அளித்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து அந்த மாணவி எழுதிய கடிதம் காவல்துறையினருக்கு கிடைத்தது.
அதில் அவர் “நான் மூன்று வருடங்களுக்கு முன் செய்த தவறுகளுக்கு இப்ப வரை தண்டனை அனுபவித்து வருகிறேன். யாரும் என்னை மன்னிக்கவில்லை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதால் சக மாணவிகள் என்னுடன் பழகமாட்டிக்கிறார்கள். என்னால் பன்னிரண்டாம் வகுப்பை தொடர முடியாது. இதனால் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.” என எழுதியுள்ளார்.
இது குறித்து சக மாணவிகளிடம் சரிகையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு, வேறொரு மாணவியின் தின்பண்டத்தை திருடி சாப்பிட்டதால், மூத்த மாணவிகள் 48 பேர் அவரை அடித்ததாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்