கடந்த 6 மாதத்தில் 11,568 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்து 1,800 -க்கும் மேற்பட்டடோர் கைது செய்தததாக ஹரியானா போலீசார் கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் 1,800 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 11,568 கிலோ சட்டவிரோத போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததன் மூலம் ஹரியானா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஜிபி நாயகம் மனோஜ் யாதவா கூறுகையில், இந்த ஆண்டு, போதைப்பொருள் சட்டத்தின் கீழ் ஜூன் வரை 1,343 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். இதில் 1,821 பேர் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 11,568 கிலோ போதைப்பொருட்கள் மற்றும் 680 கிராம் சட்டவிரோத மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் கூறினார். போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் முயற்சியில், தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் குறித்த விவரங்களை டிஜிபி, மீட்பு பட்டியலை வெளிட்டார். அதில், poppy husk 8043.2 கிலோவும், 3,150 கிலோ கஞ்சா மற்றும் 243 கிலோ அபின், 25.5 கிலோ ஹெராயின் ஆகியவை அடங்கும். மேலும், தடைசெய்யப்பட்ட மருந்துகளின் வகையின் கீழ் 10.40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகள், ஊசி மற்றும் சிரப் ஆகியவை ஜனவரி முதல் ஜூன் வரை கைப்பற்றப்பட்டன.
சிர்சா மாவட்டத்தில் 563 பேரைக் கைது 401 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல ஃபதேஹாபாத்தில் 163 வழக்குகளும், குருக்ஷேத்ராவில் 81 வழக்குகளும், ஹிசாரில் 77 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என டிஜிபி கூறினார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…