கவிழ்கிறதா குமாரசாமி ஆட்சி !11 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா !

Published by
Venu

கர்நாடகாவில்  11 காங்கிரஸ் – ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள்  சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதனால் பாஜக சார்பில் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிருபிக்க முடியாத நிலையில் வெளியேறினார்.

நீண்ட குழப்பத்துக்குப் பிறகு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதவுடன் முதல்வராக பதவியேற்றார். சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார். பெரும்பான்மைக்கு 111 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 117 உறுப்பினர்களின் ஆதரவு குமாரசாமிக்கு இருந்தது.இதனால் முதலமைச்சராக குமாரசாமி இருந்து வருகிறார்.

தற்போது பாஜகவிற்கு  105 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸூக்கு 78 உறுப்பினர்கள், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 37 உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் உறுப்பினர் ஒருவரும், 2 சுயேச்சைகளும்  எம்எல்ஏக்களாக உள்ளனர்.

காங்கிரஸ்-ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் கர்நாடகாவில்  11 காங்கிரஸ் – ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள்  சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர் . பிசி பாட்டீல், ரமேஷ் ஜர்கிஹோலி, விஸ்வநாத், நாராயண் கவுடா, சிவராம் ஹெப்பர் மகேஷ் குமதள்ளி, கோபாலய்யா, பிரதாப் கவுடா பாட்டீல் உள்ளிட்டோர் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர் .இதனால் அங்கு ஆளும் குமாரசாமி ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளது.

மேலும் இது தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் கூறுகையில்,தனிப்பட்ட காரணங்களால் சட்டப்பேரவைக்கு வர முடியாத நிலையில், 11 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொள்ளும்படி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.ராஜினாமா கடித விவரங்களை திங்கள்கிழமையன்று பார்ப்பேன் என்றும் க கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் கூறியுள்ளார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago