ஒடிசாவில் அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு 2020-21 கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) அறிவித்துள்ளது.
ஒடிசாவின் இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) நடத்திய மெட்ரிகுலேஷன் தேர்வு என்றும் அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு வாரிய மே 3 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வருவதால் தேர்வை மாநில அரசு முன்பு நிறுத்தி வைத்திருந்தது.
இதற்கிடையில்,சிபிஎஸ்இ மற்றும் சிஐசிசிஇ நாடு முழுவதும் 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.இதனை கருத்தில் கொண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்கள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் இல்லத்தின் முன் பிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மதரஸா கல்வி வாரிய தேர்வுகளும் ரத்து என்று கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் டாஷ் புதன்கிழமை அறிவித்தார்.
மாணவர்களுக்கான மதிப்பெண்கள் தேர்வு குழுவின் விதிகளின்படி மதிப்பீடு செய்யப்படும்.கொரோன நிலைமை மேம்படும் போது மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள் பின்னர் தேர்வு எழுதலாம் , “என்று டாஷ் மேலும் கூறினார்.
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 4,851 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்ப்பட்டது மேலும் ஐந்து இறப்புகளும் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…