டெல்லியில் திட்டமிட்டபடி 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெறும் – சிபிஎஸ்இ

Default Image

டெல்லியில் மார்ச் 2-ம் தேதி திட்டமிட்டபடி 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அனைத்து உதவிகளையும் அளிக்க காவல் துறை மற்றும் அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே வடகிழக்கு டெல்லியில் கடந்த 4 நாட்களாக சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறையால் அங்கு பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் கலவரமாக இருந்த டெல்லி தற்போது அமைதி நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் மார்ச் 2-ம் தேதி திட்டமிட்டபடி 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது என்பது குறி[பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nagpur Violence -Sunita Williams LIVE
prithvi shaw
pm modi donald trump
sunita williams pm modi
premalatha vijayakanth edappadi palanisamy
BJP State President Annamalai say about Nellai Rtd Police murder
ADMK Former Minister Sellur Raju