ஹரியானாவில் முதல்வர், சபாநாயகர், எம்.எல்.ஏ. உட்பட 1,074 பேருக்கு கொரோனா!

Default Image

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர், சபாநாயகர் கியான் சந்த் குப்தா மற்றும் பாஜக எம்.எல்.ஏ. இரண்டு பேர் உட்பட இன்று 1,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ஹரியானாவில் இன்று ஒரே நாளில் 1,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55,460 ஆக உயர்ந்தது.

அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 10 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 14,219 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 45,405 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஹரியானாவில் 9,442 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் இன்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர், சபாநாயகர் கியான் சந்த் குப்தா மற்றும் பாஜக எம்.எல்.ஏ. இரண்டு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்