கேரளாவில் கொரோனாவை வென்ற 105 வயது மூதாட்டி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாலுக்குனால் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.
இந்நிலையில், கேரளாவில், அஸ்மா பீவி என்ற 105 வயது மூதாட்டி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், கொல்லம் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று (புதன்கிழமை) குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இவருக்கு அவரது மகளிடம் இருந்து இந்த வைரஸ் தொற்று பரவிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறப்பாக அமைக்கப்பட்ட மருத்துவ வாரியம் சிகிச்சையை மேற்பார்வையிட்டது. சில சந்தர்ப்பங்களில் அவரது நிலை மோசமடைந்தாலும், மீண்டும் போராடி கொரோனாவை வென்றுள்ளார்.
இதற்கு முன் கேரளாவில், 93 வயதான ஆணும் 88 வயதான பெண்ணும் குணப்படுத்தப்பட்ட நிலையில், அஸ்மா பீவி தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தற்போது கேரளாவில் மிக அதிகமான வயதில் குணமடைந்து வீடு திரும்பிய மூதாட்டி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…