சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில் செயல்படுத்தும் வகையில் 101 ராணுவத் தளவாடக் கருவிகளை இறக்குமதி செய்யத் தடை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இறக்குமதிகள் மீதான தடை 2020 முதல் 2024 வரை படிப்படியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆயுதப்படைகளின் எதிர்பார்க்கப்பட்ட தேவைகள் குறித்து இந்திய பாதுகாப்புத் துறையினருக்கு அறிவிப்பதே எங்கள் நோக்கம், இதனால், அவர்கள் உள்நாட்டு தயாரிப்பை இலக்கை அடைய சிறந்த முறையில் தயாராக உள்ளனர் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்த திட்டத்தின் மூலம் துப்பாக்கிகள், சரக்கு போக்குவரத்துக்கான விமானங்கள், ரேடார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கபடும், அடுத்த 7 ஆண்டுகளுக்குள் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் உள்நாட்டு நிறுவனங்களுடன் போடப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட 101 பொருட்களின் பட்டியலில் எளிய பாகங்கள் மட்டுமல்லாமல் பீரங்கி துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், கொர்வெட்டுகள், சோனார் அமைப்புகள், போக்குவரத்து விமானம், ரேடார்கள் மற்றும் பல பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன என கூறப்படுகிறது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…