உத்தரகாண்ட் காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10,000 லிட்டர் அளவுள்ள கள்ளச்சாராயம் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயத்தை ட்ரோன் உதவியுடன் ஹரித்வார் போலீஸார் கண்டுபிடித்தனர். ஹரித்வார் காவல் துறையினர் காடுகளுக்கு அருகில் முகாம்களை அமைத்து சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பதில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பது குறித்து தகவல் அறிந்து வனப்பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 10,000 லிட்டருக்கும் அதிகமான கள்ளச்சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த கள்ளச்சாராயம் காவல் துறையினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அந்த இடத்தில் இருந்து மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய ஏராளமான உபகரணங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட சாந்தர்பால் மற்றும் மோனு ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஹரித்வார் எஸ்.பி.ஸ்வப்ன் கிஷோர் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…