Categories: இந்தியா

10, 000 கி.மீ தொலைவிற்கு எரிவாயு பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது- குடியரசுத் தலைவர்..!

Published by
murugan

நாளை மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்றத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ” மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து பொருள்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  சீரமைப்பு, செயல்பாடு மாற்றியமைத்தல் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

புதிய தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு சிறப்பான அடித்தளத்தை இந்தியா அமைந்துள்ளது. மத்திய அரசு சிறப்பான முறையில் மிகவும் வெளிப்படையாக செயல்படுகிறது. இந்தியாவின் ஆயுத தளவாட ஏற்றுமதி ஒரு லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.  செல்போன் உற்பத்தியில் உலகில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. கிராமப்புற சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.

வறுமையின் பிடியிலிருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர் – குடியரசுத் தலைவர்..!

பத்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு எரிவாயு பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது.  2 லட்சத்திற்கு மேற்பட்ட கிராமங்களில் ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.’ நீதியே முதன்மை’ என்ற கொள்கையில் புதிய நீதித்துறை நெறிமுறையை நாடு பெற்றுள்ளது. டிஜிட்டல் தளம் மிகவும் பாதுகாப்பானதாக மாறி வருகிறது. ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் பழங்குடியினர் உரிமையைப் பெறுவார்கள், ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தால் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கிடைத்துள்ளது.

நாடாளுமன்றம் முத்தலாக்கிற்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றியது, டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு வலிமை சேர்த்துள்ளது. உலக அளவில் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது. கடந்த மாதம் மட்டும் ரூ. 1,200 கோடி அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை புதிய சாதனை நடந்தது.  இளைஞர்கள், மகளிர், விவசாயிகள், ஏழைகளின் முன்னேற்றத்தில் அரசு கவனம் செலுத்துகிறது. சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போதிலும் மக்களுக்கு பாதிக்காத வகையில் அரசியல் செயல்பட்டது.

இரண்டு கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மத்திய அரசின் சுய உதவி திட்டங்களில் 10 கோடி பெண்கள் இணைந்துள்ளனர். கொரோனா பேரிடர் காலத்தில் நாட்டு மக்கள் நலனில்  மத்திய அரசு கவனம் செலுத்தியது. தேசிய நெடுஞ்சாலைகளில் நீளம் 10,000 கிலோ மீட்டரில் இருந்து 1.46 லட்சம் கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.  கடந்த பத்து ஆண்டுகளில் கிராமப்புற சாலைகளின் நீளம் 4 லட்சம் கிலோமீட்டர் ஆக உயர்ந்துள்ளது” என தெரிவித்தார்.

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago